
திங்கள் முகமெடுத்து 
செவ்வாய் இதழெடுத்து
பிள்ளை மலர் சிரிப்போடு
ரோஜி-ப்ரெடியின்
ராஜகுமாரி பிறந்தாள்!
முழுமதிக்கு முந்தின நாள்
முழுமதியாக பிறந்தவள்!
வசந்தம் வருமுன் 
வசந்தமாக வந்தவள்! 
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு 
மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி 
[மாசி மதம் இருபத்தி ஐந்தாம் தேதி]
திங்கள் கிழமை 
மலரும் வேளை 
[குறிப்பாக நள்ளிரவுக்கு பின் 
இருபதாம் நிமிடத்தில்]
திங்களாக மலர்ந்தவள்!
நீ வாழ்க, வளர்க, 
வையகம் போற்ற 
சிறக்க...
உன் பெற்றோருக்கு 
பெருமையாக...
மற்றவருக்கும் 
மாதிரியாக...
கடவுளின் கருணையாக 
நீ வளர்க...
உன்னை வாழ்த்தி வேண்டும்,
உன் பெற்றோரின் நண்பன் 
 
 

No comments:
Post a Comment