அண்ணன் எந்தன் கோயிலிலே
அணையாத தீபம் என் தங்கை
அந்த தீபத்தை ஏற்றிவைப்பேன்
எழிலுடனே விளங்கசெய்வேன்.
எனக்கென்று வாழவில்லை -என் 
தங்கைக்காக வாழ்கின்றேன் 
அவள் வாழ்வை வளமாக்க 
கற்பனையில் மிதக்கின்றேன்.
கர்ப்பனையில் கண்டவைகள்-தங்கைக்கு 
காரியமாய் நடக்க வேண்டும் 
காலமெல்லாம் அதற்காக 
கழிந்தாலும் கவலையில்லை.
வரன் பெற்று வளமும் பெற்று-அவள் 
வாழ்வெல்லாம் களிக்க வேண்டும் 
மக்கள் பெற்று மனம் நிறைந்து 
மகராணியாய் விளங்கவேண்டும்.
1980
Friday, 25 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
 
 

No comments:
Post a Comment