நட்பை நாடி நான் வந்தேன்-நல்
வாழ்த்தை கூறி உனை புகழ்ந்தேன் 
நன்னிலம் சிறந்து நீயும் வாழ - நல் 
நாயகன் இயேசுவை வேண்டி நின்றேன்.
நலம்நிறை எண்ணம் நச்செனக் கொண்டாய் 
நன்றென செய்ததை தீதென கொண்டாய் 
சிந்தயிர் தோன்றிய சீரான நினைவை 
சீர்கெட்டதென்று சீற்றம் கொண்டாய்.
சிலவேளை நீயே இப்படியாக -என் 
சிந்தையும் கலக்கம் கொள்வதை பாராய் 
உள்ளத்தை புரியாதுணர்வை இழக்கும் 
உனக்கென கூற எனக்கென உண்டு.
1991
Thursday, 24 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
 
 

No comments:
Post a Comment