Thursday 14 October 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


'தொல்லை'என நினைக்கும்

தொலைதூர தோழிக்கு...

விசித்திரம்தான்...

விலகிச்செல்லும்போது

விளக்கம் கேட்டு பயன்...

'மௌனம்' கலைந்து

கரை புரண்டதே

'சிறுசேதி'என்றபோதும்

சீற்றம் குறைந்ததில்லையே...

கொட்டி தீர்த்தால்

கோபம் தீருமென்றால்...

தொல்லை தரவல்ல

'தொலை'ந்ததை தேடவுமல்ல

வாழ்த்தமட்டும்...

தொடர்ந்தும் வாழ்த்துவேன்

நினைவுகள் நீங்கும்வரை...



No comments: