Friday 26 November 2010

வறுமை, பசியின் கொடுமை...


ஜூலி வீட்டில் விளைந்த வாழைப்பழங்கள் சிலவற்றை எங்களோடு பகிர்ந்துகொண்டாள். அந்த பழம் ஓன்று அலுவலக மேசைமீதிருக்க, ஒரு ஏழை பெண்மணி நோய்க்கு மருந்து வாங்க உதவி கேட்டு வந்தார்கள். வேறு யாரும் அவர்களுக்கு உதவி செய்ததாக தோன்றவில்லை. என்னிடமும் அப்படியொன்றும் இல்லை என்றபோது இருப்பது ஏதாவது கொடுத்தால் போதும் என, என்னிடமிருந்த நாற்பது ரூபாயில் இருபது ரூபாவை வாங்கிகொண்ட அவர் மேசைமீதிருந்த பழம் எடுத்துக்கொள்ளட்டுமா என வினவ, நானும் நிறைவுடன் எடுத்து கொடுத்தேன். அங்கேவைத்தே எதுவும் பாராமல் அதை ஆசையோடு சாப்பிட்டதை பார்த்தபோது எவ்வளவு பசியோடும், பிணியோடும், வறுமையோடும் அந்த ஏழை பெண்மணி வந்தார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இவ்வளவு நிறைவான ஒரு அனுபவம் மனம் குளிரசெயதது.


பசியின் கொடுமை தெரிந்ததால் தானே இயேசுவும் அப்பமென தன்னையே தந்தார்! பசிப்போர்முன் 'இறைவன்' அப்பமாக மட்டுமே வர முடியும், வரக்கூடும்.

கோயில்களில் அர்ச்சனையாகும் உணவு காணிக்கைகளை ஏதேனும் கடவுளர்கள் சாப்பிட்டதுண்டா என்று ஒரு வாசகர் கேட்க, தன்னுடைய பிள்ளைகளுக்கு உணவில்லாதபோது எந்த ஒரு தாயும் சாப்பிடமாட்டாள் ஆதலால், மண்ணுலகில் பசியுள்ள யாரும் இல்லாத ஒரு நாள் நிச்சயமாக கடவுளர்களும் அதை சாப்பிடுவார் என பதில் அளிக்கபெற்றார்.


இதேபோல் வேறு ஒரு நிகழ்வும் கேள்விப்பட்டிருக்கிறேன். கண் தெரியாத ஒரு பாட்டி வழியோரமாக இருந்து பிச்சை கேட்க, ஒரு சில இளைஞர்கள் அவருக்கு ஒருபொதி சோறு வாங்கி கொடுத்தார்களாம். சோறு வாங்கிய அந்த அம்மையார் கடவுளுக்கு நன்றி சொல்ல, அந்த இளைஞர்கள் பரிகாசமாக அவரை கேலி செய்து சிரித்தது மட்டுமின்றி, இது கடவுள் தந்தது அல்ல, நாங்கள் தந்தோம் என்றார்களாம். அதற்க்கு அவர், 'கொண்டு வந்தது யாரேனும், கொடுத்துவிட்டவர் கடவுளே' என்றாராம்! இப்படித்தான் கடவுள் வரவேண்டும். அப்படியே இயேசுவும் வந்தார்.


எனவேதான், 'எண்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்' என ஜெபிக்க நமக்கு சொன்னார். ஆகாயத்து பறவைகளை போற்றும் அவர், வயல்வெளி பூக்களை உடுத்தும் அவர், அவர்தம் பிள்ளைகள் நம்மை மறப்பதெங்ஙனம்?


நாளைக்கென இன்று நாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் உணவு, இன்று பசித்து தூங்கும் உன் அயலானது! உன்னிடம் அது இருப்பது தகாது, அது அந்த ஏழையிடமிருந்து திருடப்பட்டது என்றுகூட சொல்லலாம். நாளையைப்பற்றிய கவலை நமக்கேன்?


இங்கு அனைவரின் தேவைக்கும் எல்லாம் இருக்க, யாருடைய பேராசைக்கும் ஒன்றும் இல்லை என காந்தி தாத்தா கூறினார் என்றால் அது சரியே.


'விருந்து புறத்திருக்க தான் உண்டல் - சாவா

மருந்தெனினும் வேண்டர்பாற்றன்று.'

Thursday 25 November 2010

Remembering you with love and gratitude!



Remembering you with love and gratitude!
From:
William Graham View Contact
To:
Pankiras Arulappan
Dear Panky,
I know that it has been a while since I have written to you. Sometimes the time catches up with you and catches you off guard. I know that I have been thinking about you and I remember you each day in prayer. I hope that you are happy and satisfied in your work. I know that trying to balance so many things in your daily life will occasionally become tiresome and at times discouraging, but when we do it out of love for others and for the people of God much of the burden lightens and we are able to accomplish our tasks.
You are a special inspiration to a great many people, here, and at home. I hope you realize that. Your prayerfulness has been and continues to be a blessing in my life. Even now, after all these years, when I go to Our Lady of Good Counsel to offer Mass, I feel revitalized and know that I am praying with the people and helping them to pray with more fervor.
I have spoken with Joyce and Marylee, Bill and Joanne, and they send you their love. I hope your family is well, my sister and brother and their families are doing great. You would be amazed at how big Olivia and Ryan Charles are getting. Ryan became 3 years old, yesterday. It's hard to believe. You held him in your arms and I hope will hold them in your heart and your prayers.
With Love and Prayers,
Bill

Saturday 13 November 2010

William Lourdayyan RIP

William Lourdayyan, 61, passed away at the Jubilee Memorial Hospital on Thursday after a prolonged illness for about two months. He was ordained a priest for the diocese of Trivandrum in 1975. A man with a dream for the community he belonged to and the diocese, he served with commitment in many parishes and also as the Director of the Pastoral Ministry. He was one of the founding fathers of St. Jude's College at Thoothoor which changed the very nature of the region for the better. He did his LL. B from the University of Bangalore and M. A in Christianity from Mysore University.
In 1998, he 'left' priesthood to marry a nun, Thankamma. After the marriage he wrote a book on the burning to death of Mr. Stanes and his two little sons in their vehicle in Orissa. He also seems to have registered for research in the M. S. University. Have twin daughters. He established St. Antony's School upto VIII having some 560 students.
In the climax of his illness, he seemed to have sought for anointing of the sick, which was not given, as he was not 'dispensed' from 'priesthood!' Also his unexpected death left many wondering what the church is! How can the church confine the mercy of God to exclude anyone from its embrace? Paul said that we are no more under any law, as Jesus has freed us from all such bondages. It is no more the law which is at work, but the grace of God. But, now the church insists more on the Canon Law than on the mercy of God being revealed in the Scriptures!
Any sin should be 'absolved', if anyone thinks that 'absolution' is needed, at least at one's death bed. Let no one dictate terms to God! God's mercy so rampant in the scriptures, not to exclude anyone from it, not even the thrice betrayed Peter!
The authorities in the heart of heart know what is right, but don't have the guts to accept the dictates of their conscience, instead yeild to the 'canonists!' And they pay 'private' visits!

Thursday 11 November 2010

ആമുഖം

പ്രീയ സുഹൃത്തുക്കളെ,
തമിഴ് നാട്ടിലെ ആസ്ഥാന കവിയായ കവിപേരരസു വൈരമുത്തുവിന്‍റെ പ്രസിദധ കവിതാ സമാഹാരമായ "ഇന്ത പൂക്കള്‍ വിര്പനൈക്കല്ല" എന്നാ പുസ്തകത്തിലെ അതി സുന്ദരവും, വിപ്ലാവാത്മകവും, സാമൂഹ മനസാക്ഷിയെ ചോദ്യം ചെയ്യുന്നതുമായ ഒരു കവിതയാണ് ജ്നാനിപ്പോള്‍ നിങ്ങള്‍ക്കായി അവതരിപ്പിക്കാന്‍ പോകുന്നത്...

'പുര നിറഞ്ഞ പെണ്ണ് ' എന്ന് അര്‍ഥം കൊള്ളാവുന്ന 'മുതിര്‍ക്കന്നി' എന്നാണു ഈ കവിതയുടെ പേര്. ദീര്‍ഘമായ മുപ്പത്തിയേഴ് വര്‍ഷങ്ങള്‍ കഴിഞ്ഞിട്ടും ഒരു വിവാഹം ഒത്തുവരാതെ നൈരാശ്യത്തിലേക്ക്‌ വഴുതിവീഴുന്ന ഒരു അബലയുടെ നെടുവീര്പുകളാണ് ഈ കവിതാ...

സ്ത്രീധനം ഇല്ലാതെ, 'സൌന്ദര്യം' ഇല്ലാതെ, ആളും അര്തവുമില്ലാതെ യുവത്‌അവും സ്വപ്നങ്ങളും പൊലിഞ്ഞു പോയ ഒരു സ്ത്രീ ജന്‍മതതിന്‍റെ ദൂരവസ്ഥയാണീ കവിതാ...

നിങ്ങള്‍ക്കായി സുന്ദര തമിഴില്‍ ഈ കവിത ജ്ഞാന്‍ ആലഭിക്കട്ടെ...

മുതിര്‍കന്നി

തെന്‍റലേ
എന്നൈ മട്ടും
വിട്ടു വിട്ടു വീസു.

നിലവേ
പാലില്‍ ഊറിയ ഉന്‍ கிரணங்கள்
என் வீட்டு வாசலில்
விழ வேண்டாம்.
பூக்காரிகளே
இந்த தெருவில்
என் வீட்டை
கழித்துவிடுங்கள்

என் கணக்கில்
முப்பத்தேழு கோடைகளே
முடிந்தன

என் கனவுகளில் மட்டும்
குதிரைகளின் குளம்படிகள்
ஆனால்
எந்த ராஜகுமாரனும்
என் வீட்டு வாசலில்
இறங்கவே இல்லை

பறக்க நினைத்து
வான் பார்த்த என் இளமை
இன்று
புதைய நினைத்து
பூமி பார்க்கிறது

கண்ணீரில் கரைந்தது
கண்மை மட்டுமா?
இளமையும்
இளமையும் ...

கன்னத்தில் விழுந்த
மெல்லிய பள்ளங்களில்
என்
கனவுகளின் சமாதிகள்

கன்னக் கதுப்பில்
ஒரு வெள்ளிக் கம்பி
காதோடு பேசுகிறது:
"முதலில் நிற்கப் போவது
எது
மாதவிலக்கா?
உன் மூச்சா?"

எங்கிருக்கிறாய்
என் ஷாஜஹான்?
இறந்த பின்னே
தாஜ்மஹால் வேண்டாம்
இருக்கும்போதே
ஒரு குடிசை கொடு

எங்கிருக்கிறாய்
என் ராமனே?
இந்த சீதை
மணவாசம் காணுமுனே
வனவாசம் கொண்டாளே

வேண்டாம்
ஷாஜஹானும் வேண்டாம்
ராமனும் வேண்டாம்
நீயாவது ராவணா...
நீயாவது...
புஷ்பக விமானமா கேட்டேன்
கள்ளத்தோணியிலாவது...

எங்கள் வீட்டு
தேநீர் கோப்பையில்
எத்தனை உதடுகள்
எங்கள் வீட்டு
சிற்றுண்டி தட்டில்
எத்தனை சுவடுகள்
அவர்கள்
பலகாரம் மென்று
என்னை துப்புகையில்
நான்
அலங்காரத்தில் ஆண்டாளாய் ...
அனால்
ஆடை கொண்டும் ஏவாளாய் ...

இப்போதெல்லாம்
எனது சுயம்வர மண்டபத்தில்
அப்பர்கள்
அப்பர்களின் அப்பன்கள்

ஆடி முடித்த
அருணகிரிகள்
கைத்தாங்கலாய் வரும்
பிருதிவிராஜன்கள்
குதிரைக்கு புல்வாங்க
கூலி கேட்கிறார்கள்

கழிந்து போனது
காலம்
இனி
மறந்து மழை பெய்தாலும்
அது
வேரில் வீழும் மழையா?
அன்றி
விறகில் வீழும் மழையா?

என்
இளமையின் வேர்களை
கனவு தின்றது
இளமையின் கிளைகளை
ஜாதகம் தின்றது
இளமையின் தளிர்களை
செவ்வாய்தோஷம் தின்று முடித்தது
இளமையின் மலர்களை
குழப்பம் அச்சம்
கொய்து கொண்டன

இப்போது
கொடி வாடி நிற்கிறது
இதழ்கள் இழந்த காம்போடு
தூண்டிலில் சிக்கவில்லை
அனால்
இது
கற்புள்ள கருவாடு

இன்று
ஒருவனுக்கு ஒருத்தி என்றால்
அர்த்தமுண்டா?
பெண்கள் தொகை அதிகமாச்சே
பொருத்தமுண்டா?

சொல்லுங்கள்
என்
முந்தானையை மதத்தோடு
முடிச்சிட்ட்டது யார்?
ஜாதி சிலுவையில் என்
தங்க தேகத்தை
அறைந்து போனது யார்?
என்
புணர்ச்சிக்கு விலைவைத்த
பொருளாதாரம் எது?

என் சூரியனை மறைக்கும்
கிரகம்தான் யாது?
கிளர்ந்து வெளியேறுங்கள்
கிளிகளே

இதுவரை
பாத்திரத்தைத்தானே
துலக்கிவைத்தோம்

சாத்திரத்தை...?


Tuesday 2 November 2010

கற்பும் கருப்பையும்...

கருப்பை இல்லாத கற்பு
கற்பனையோ, காரியமோ?
'ஒருவளை கெட்ட எண்ணத்தோடு
பார்த்தாலே அது பாவம்' எனும்போது
கற்பு எண்ணத்திலா, செயலிலா?
எண்ணத்தால் கற்பு கலைந்துவிட்டால்
பின் கற்பழிப்பை என்னென்பது?
கருப்பை இல்லாதவர்களும்
கற்பை பற்றி பேசலாமா?
கற்பு, தூய்மை, உண்மை, நன்மை
என எல்லாமே ஒன்றல்லவா?
'வாய்மை எனப்படுவது யாதெனில் -யாதொன்றும்
தீமை இலாது செயல்.' என்பது சரியெனில்
தீமையிலாததெல்லாம் சரிதானே?
எண்ணங்கள் சோதனை எனலாம்.
சோதனைக்கு உட்பட்டால்
வேதனைதரும் செயல் பிறக்கும்
செயல் தொடர்ந்தால் பழக்கமாகும்
பழக்கம் பின் பாவ வாழ்க்கையாகும்!
எதற்கு இந்த சிந்தனை?
எதற்கு இப்படி எழுதி
தொலைக்கவேண்டும்?
எங்கோ சில குற்ற உணர்வுகள்
இருந்து தொல்லை தருகின்றதோ?
இப்படி எழுதினால் குற்றவுணர்வுகள்
குறைந்துபோகுமோ, இல்லை
தொலைந்துபோகுமோ?
இந்த எழுத்தே ஒரு கண்ணாடியாமோ?
மனதின் ஆழங்களை வெளிக்கொணருமோ?
மனம் வெளிப்படும்போது,
வெளிப்படையாகும்போது,
சுத்தமாகும், சுகமாகும்.
இது போதும், இப்போது.
இன்னும் தொடருவேன் தப்பாது.