Monday 19 August 2013

சும்மா எழுத்து...!

'நான்' என நினைப்பது தவறா?
தவறென சொல்வது நீயே!
நான் ஏன் கவனிக்கவேண்டும்
கவலைப்படவேண்டும்?

நினைப்பதும், சொல்வதும்
செய்வதுமெல்லாம் நான்தானே!
உனக்கேன் கவலை?
பாதிப்பு ஏதுமிருந்தால்
பொறுப்பேற்கிறேன்,
அவசியமென்றால்
பரிகாரம் செய்கிறேன்...

சும்மா இருப்பது சுகமில்லை
சுறுசுறுப்பின்றி சோர்ந்துபோவோம்
செயலிழந்தால் செத்ததற்கு நிகர்
செய்வோம் நன்மை செய்வோம்
நமக்கும் பிறர்க்கும் நாளும்.



No comments: