Wednesday 23 October 2013

தீபகற்ப தென்றல் 2013

நெடு நாளைய இடைவேளைக்கு பிறகு
நம்மூர் பிரசுரமான தீபகற்ப தென்றலுக்கு
இன்னொரு பதிப்பு வரவிருப்பதில்
மனமார மகிழ்கிறேன்,
வாய் நிறைய வாழ்த்துகிறேன்!

'நீராரும் கடலுடுத்த நிலமடந்தை'
இயற்கை அன்னையின் இனிய மகள்
கடல் அன்னையின் சீற்றத்தால்
கதியிழந்து கண்கலங்கி நிற்கின்றாள்.

சீறும் அலைகளையும் - கரை
புரண்டுவரும் வெள்ளத்தையும்
ஆண்டாண்டு பார்த்தவர்கள்
பயமின்றி பழகிவிட்டோம்....





No comments: