Friday 20 December 2013

கிறிஸ்துமஸ்- புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

கிறிஸ்துமஸ் இன்னொருமுறை...
கிறிஸ்துமட்டும் இல்லாத குறை ...
அவர் 'இருந்தால்' எல்லாம் நிறை!

உடலோடு இல்லையெனினும்
உண்மையிலேயே  இருக்கிறார்
அன்பாய், அக்கறையாய், நன்மையாய்
நீதியாய் நாளும் இருக்கிறார் நம்மோடு.

இந்நற்செய்தி மதிப்பீடுகளை
மதிக்காத மதம் இவற்றை
விலைபொருளாக்குது
மனிதம் விலையின்றி நிற்குது...

இறையாட்சி நம்மிடையே
இருப்பதை நாம் உணரவில்லை
எளியோரில் ஒருவனாக இயேசு
என்றும் வருவதையும் புரியவில்லை!

சிலையாக, சித்திரமாக பார்க்கிறோம்
நாம் சிலையெனவே இருப்பதனால்
பசிக்கொடுமை தெரிந்த அவர்-பிறர் 
பசிதீர்க்க ஆவன செய்தார்


[தொடரும்...]

கிறிஸ்துமஸ்- புத்தாண்டு-2014- நல்வாழ்த்துக்கள்!


No comments: