Friday 16 January 2009

அமுதா-பிரபு மணவிழா - திருப்பலி வரவேற்ப்பு...

பாசமிக்க அருட்பணியாளர்களே, நேசமிக்க உற்றார் உறவினர்களே, நண்பர்களே, இம்மணவிழா நாயகன்-நாயகி அமுதா-பிரபு செல்வங்களே உங்கள் ஒவ்வொருவருக்கும் எமது இதயம் நிறைந்த வாழ்த்துக்களும் வணக்கமும்...
மணக்கோலம் பூண்டு பூரித்து நிற்கும் இவ்விளம் தம்பதியினருக்கு இன்றைய நாள் கனவு நனவாகும் நாள், காதல் கைகூடும் நாள், கடவுள் நிச்சயித்து ஆசீர்வதித்த நாள். இப்போது இறைமக்களாகிய நமது ஆசீருக்காக வேண்டி நிற்கின்றார்கள்... அவர்களுக்காக ஜெபிப்போம், அவர்களை வாழ்த்துவோம்...
பரிசுகள் என்பது பலவகை. ஆனால் ஒரு இளைஞனுக்கு, இளம் பெண்ணுக்கு அது கடவுள் தேர்ந்து தரும் வாழ்க்கை துனையைவிட மேல் வேறெதுவாகும்? "மனைவி/கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று கவிஞன் பாடியது அதனால்தான்போலும்! அத்தகைய பெரும் பேறை இவர்களுக்கு அளித்த அன்பிறைவனுக்கு நன்றி பலியாக இத்திருப்பலியை நிறைவேற்றி இவர்களை வாழ்த்துவோம்.
இவர்கள் குடும்ப வாழ்க்கை அன்பு, பண்பு, பாசம், நேசம் போன்ற அழகு கற்களால் கட்டப்பட்டு , உயிரெனும் தியாகத்தால் ஊட்டம்பெற்ற உயிர் ஓவியம்போல் திகழ இவர்களுடன் நாமும் சேர்ந்தே ஜெபிப்போம், இவர்களை வாழ்த்துவோம். இவ்வரிய நிகழ்வுக்கு வருகை தந்த உங்கள் ஒவ்வொருவரையும் இத்திருப்பலிக்கு வரவேற்று விடைபெறுகின்றேன்...

No comments: