Saturday 17 January 2009

அப்பம் :

கோதுமை மணி அரைந்து மாவாக்கப்பட்டு தூய நற்கருணை அப்பமாவதுபோல் நாமும் உடைந்து ஆன்ம பலிக்கான அப்பமாக அரைக்கப்படவேண்டும். வானக அப்பம் வையாக உணவாகி விண்ணக உறவில் உன்னுடன் வாழ வரம் தந்து எம்மைக்காத்த எம்மாபரனே இத்திருமண தம்பதியினருக்கு அன்றன்றைக்கு தேவையான உணவோடு ஆன்ம உணவாகிய அப்பம் எனும் போஜனத்தையும் கொடுத்து உதவ இவ்வப்பங்களை காணிக்கையாக்குகின்றோம், ஏற்றருள்வாய் இறைவா...

இரசம்:

திராட்சை பழங்கள் மிதிக்கப்பட்டு இரசமாவதுபோல் நம் வாழ்வு துயரால் மிதிக்கப்பட்டு வாழ்வு பலிக்காக இரச்மாகவேண்டும். இத்தகு தியாகத்தால் இத்தம்பதியினர் வாழ்வு வளமாகி, ஒளிர்ந்து புகுந்த வீட்டிற்கும் தங்களது புது குடும்பத்திற்கும் புகழ் சேர்த்து மானிடம் உயர, இறையரசு நிலவ தங்களையே அர்ப்பணிக்கவேண்டி இந்த இரசத்தை காணிக்கையாக்குகின்றோம், ஏற்றிடுவீர் இறைவா...

No comments: