Monday 9 March 2009

ரோஜி-ப்ரெடி-> ராஜகுமாரி!


திங்கள் முகமெடுத்து

செவ்வாய் இதழெடுத்து

பிள்ளை மலர் சிரிப்போடு

ரோஜி-ப்ரெடியின்

ராஜகுமாரி பிறந்தாள்!


முழுமதிக்கு முந்தின நாள்

முழுமதியாக பிறந்தவள்!

வசந்தம் வருமுன்

வசந்தமாக வந்தவள்!


இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு

மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி

[மாசி மதம் இருபத்தி ஐந்தாம் தேதி]

திங்கள் கிழமை

மலரும் வேளை

[குறிப்பாக நள்ளிரவுக்கு பின்

இருபதாம் நிமிடத்தில்]

திங்களாக மலர்ந்தவள்!


நீ வாழ்க, வளர்க,

வையகம் போற்ற

சிறக்க...


உன் பெற்றோருக்கு

பெருமையாக...

மற்றவருக்கும்

மாதிரியாக...

கடவுளின் கருணையாக

நீ வளர்க...


உன்னை வாழ்த்தி வேண்டும்,

உன் பெற்றோரின் நண்பன்


No comments: