Friday 20 March 2009

மோளி - சாலோ திருமகள்...


பூமணம் கொண்ட மோளி

பால் மணம் கொண்டாய்

பொங்கிடும் தாய்மையில்

தங்க சேயினை ஈன்றாய் வாழி!


தாய்மை மோளிக்களித்த சாலோ

தகைசான்ற தந்தையானாய்

வானத்து தாரகத்தை நீயும்

வையகத்தே தந்தாய் வாழ்க!


மோளியின் மோகன ராகமிவள்

சாலோவின் சப்தஸ்வரமிவள்

சங்கீதம்போல் இவள் வளர்க

சந்தோசம் அனைவருக்கும் தருக.


மேரிபதியாம் சூசையப்பர் பெருவிழா

தவக்காலத்து விதிவிலக்கு திருவிழா

இவ்வரிய மார்ச் பத்தொன்பதாம் நாள்

இகம் வந்து இன்பம் தந்த திருமகள்!


பங்குனி மாத பாவை இவள்

ஆறாம் தேதி அழகு இவள்

பார் போற்ற சிறக்க

பரமன் உனை காக்க!

- பங்கி



No comments: