Saturday 7 February 2009

யாத்திரைக்கு வாழ்த்து...

புத்தம்புது காலைப் பொழுதினிலே
புதிதாக வந்த உறவினிலே
புண்ணியவானின் உள்ளத்திலே
பூவாக இடம்பிடித்தேன்.

வாழ்க்கையென்னும் படகினிலே
வசந்தகால சிறகெடுத்து
வானத்தில் பறக்க நினைக்கும் உன்னை
வாழ்த்த எனக்கு வார்த்தையில்லையே.

பாதைகள் தூரமாகவே
பயணங்கள் தொடர்ந்திடவே
பாசத்தால் உன்னை அணைத்திடவே
பாவிமனம் துடித்திடவே.

உன்னை சிறிதுநாள் பிரிவதென்றதும்
உலகமே இருண்டுவிட்டது
ஊரில் நீ இல்லையென்ற எண்ணம் வந்ததும்
ஊமையாய் நானழுதேன்.

நீண்டதூர இரயில்பயணத்தில் - துணையாக
நிற்ப்பதற்கு உதவி இல்லையென நீ தவிக்க
இயற்கையே உன் வரவை நாடி
இறையவனும் துணை வருவார்.

வானத்து முத்தெடுத்து வாசலிலே கோலமிட்டு
வரும் வழியில் தோரணமமைத்து
வழிமேல் விழிவைத்து - நீ
வரும்வரை காத்திருப்பேன்.

ஆயிரம் வாழ்த்தொலிகள்
அண்ணனை வாழ்த்த வார்த்தையின்றி தவிக்கும் தங்கையின்
ஆயிரம் முத்தங்கள் பொழிந்து வாழ்த்துகிறேன்
ஆனந்தமான பயணம்தனிலே.
[ஜாக்குலின் ௧௬.௧௧.௧௯௯௧]

No comments: