Sunday 1 February 2015

Bhuvitha Vonod

புவிதாக்கண்ணு,

பிறந்தநாள் உனது இன்று...
பிறநாள் போலன்று
கொண்டாடுவோம் நன்று...

அனைத்திலும் அமைதி காத்தாய்
ஆண்டவரருள் பெற்றாய்
வாழ்க்கை துணையெனவே
வினோதை தந்தார்
வாழ்நாளெல்லாம் ஆனந்தமடைய...

வினோதம் மனமகிழ்விற்கு 
கொண்டாட்டமும் அதனாலே
வினோதும் உனக்களித்தது அதுவே...

ஆனந்தத்தின் சிகரமென
ஆராத்யா எனும் அழகு தேவதையை 
ஆராதனைக்குரியவளாக அவர் தந்தார்...
அங்ஙனமே வளர்த்துக அவளை
அகிலமும் போற்றிப்புகழும் வண்ணம்...

நிறைவாழ்வென்பது சுலபமல்ல
அதுகிடைத்தல் வாழ்க்கைப்பேறு...
அப்பேறுபெற்றாய் அத்தோடு
மகப்பேறும் சேர்த்தே பெற்றாய்
பிறந்தபயனையடைந்தாய்
மாதவம் செய்தவளாக...

நன்றிசொல்ல வார்த்தை வேண்டாம்
நன்றியாகும் வாழ்வு வேண்டும்
அதுவே ‘வாழ்வாங்கு வாழ்வு...
வானுறை தெய்வ’த்தோடு வாழ்வு...

பிறந்து, வளர்ந்து, மணந்து, ஈன்று
நிறைவாழ்வெனும் பெருமைபெற்ற
புவிக்கு மாமனின் இனிய
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இன்றும் என்றும் எவ்விடமும்!
பங்கிமாமா/29.01.2015


No comments: