Sunday 1 February 2015

Camitha Daniel

கமிதாக்கண்ணு,
உனது மற்றும் புவிதாவின்
பிறந்தனாளின்று...
பரிசுகளும் பதக்கங்களும்தர
தகுதியுண்டு உனக்கு...

காரணம், கடைசியில் நீ
வாழ்க்கையை உணர்ந்துகொண்டாய்...
புகுந்தவீடுதான் நிரந்தரமென்று
இன்றல்ல, நேற்றல்ல, ஆதியாகம
நாட்களிலிருந்தே சொல்லப்பட்டதை.
இப்போதாவது புரிந்துகொண்டாயே...

ஒருவகையில்
உன்னைப்போலவே மாமனும்
ஏழ்மைவிஷயத்தில்...
எடுபிடியாக பேசுவதில்...

ஆனால்
இதயத்தில் சுத்தமானவர்கள்
எதையும் தாங்குவதில்
எவருக்கும் இளைத்தவர்களுமல்ல...

எனவே, நிலையான நிம்மதி
நமக்குமட்டுமே சொந்தம்
அதுவன்றோ நிஜமான பரிசு,
பார்போற்றும் பதக்கம்...

அவற்றை நிறைவாகத் தந்து
உன்னை நிழல்போல் இன்றும்
என்றும் தொடர இறைவனை வேண்டி
பிறந்த நாள் வாழ்த்தும்
-மாமன்

29.01.2015

No comments: