Saturday 7 February 2009

'அண்ணன்-தங்கை'

'அண்ணா' என்றழைத்த நாவால்...
அடுத்தவர்கள் கேலிசெய்தும்
அன்புடனே அழைத்தாயே
அருமை தங்கை நீயே!

உடன் பிறவாதிருந்தபின்னும்
உரிமையுடன் அண்ணா என்றழைத்தாய்
உன்னை நான் தங்கை என்னும்
உறவுடனே ஏற்றுக்கொண்டேன்.

உயிருள்ளவரை நீயும்
உருக்கமுடன் அண்ணா என
உறுதியாக அழைக்கலாமே
உள்ளத்தை வெல்லலாமே.
[௩0.௧0.௧௯௯௧]

No comments: