Tuesday 10 February 2009

புது உறவு தந்த இன்ப சுற்றுலா [தொடர்ச்சி ௪]

அருவியில் வேறு சில நண்பர்கள் குளித்தார்கள். அந்த நீரை பருகும்போதுதான் சுவையற்ற நீருக்கு உண்மையிலேயே சுவை இருப்பதாக உணர்ந்தோம். அருவியிலிருந்த பல கற்களை எடுத்துக்கொண்டு வாகனத்தை நோக்கி அதிக சலனமில்லாமல் நடந்தோம். பேசி, சிரித்து மகிழ்ந்த நாங்கள் தர்ம சங்கடமாக வாகனத்தில் ஏறினோம். எங்கள் தோழியை தேற்ற நினைத்தோம். ஆனால் முடியவில்லை. பயணம் தொடர்ந்தோம். 'நான் உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னை என்றும் கைவிடுவதுமில்லை' என்ற பாடலை அனைவரும் பக்தியுடனும் உருக்கத்துடனும் இறைவனை நினைத்து பாடினோம். அந்திப் பொழுதில் பறவைகள் பாடத் துவங்கியது. மனிதர்களைவிட ஒவ்வொரு நிமிடமும் இயற்கையே இறைவனை புகழ்ந்துகொண்டிருக்கும் உண்மையை உணர முடிந்தது.
திருமலை ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்குள்ள ஒரு துறவி எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஆட்கள் நடமாடும் இடத்திலிருந்து தள்ளி தனித்து நின்றது அந்த ஆசிரமம். நான்கு புறமும் மரம், செடி, கொடிகள் பாதுகாப்பாக இருக்க நாடுவில் ஒரு சிறிய வீடு போன்ற அமைப்பு. அதில் ஒரு புறம் ஒரு சிறிய அறையை அழகாக அலங்கரித்து இறைவனுக்கு பீடம் அமைத்திருந்தார்கள். வேதாகமும், இறைவனைப் புகழும் இசைப்பா புத்தகங்களும் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து சிறிது தொலைவில் ஓலையால் பணிந்த ஒரு சிறு ஹால். அதிலிருந்துதான் துறவிகள் இறைவனுடன் பேசுவார்களாம்! அந்த ஆசிரமத்தில் நுழைந்ததும் ஒரு தெய்வீக அமைதி. எந்த இடத்தில் பார்த்தாலும் இயற்க்கை எழிலரசி அரசாட்சி செய்துகொண்டிருந்தாள். அவளுக்குத்தான் எத்தனை பெரிய உலகத்தில் அரசாட்சி. எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. அந்த இயற்க்கை காட்சியில் எண்கள் மனக்கவலை மறைந்தது. மீண்டும் புது தெம்புடன் காட்சியளித்தோம். துறவி எங்களை ஒரு மலை இருக்கும் பக்கமாக அழைத்துசென்றார். மலை என்று தெரியாவண்ணம் அது பச்சை போளத்தை உடுத்தியிருந்தது. அதில் நாங்கள் ஏற தொடங்கினோம். ஒற்றயடிப்பதை. பாறை தெளிவாக இல்லாமலிருந்தாலும் ஏறுவதற்கு முடிந்தது. ஒவ்வொரு இடத்திலும் எம்பெருமான் இயேசு எங்களுக்காக ஏற்றுக்கொண்ட அந்த வெற்றியின் சின்னமான சிலுவை பொறிக்கப்பட்டிருந்தது. அன்பு தெய்வம் தான் சிலுவை சுமந்து கொண்டு போகும்போது அனுபவித்த பதினான்கு இடங்களை நினைவுபடுத்தும்படியாக ஒவ்வொரு இடத்திலும் எண் பொறிக்கப்பட்டிருந்தது. எவ்வளவு வேதனை எங்களுக்காக அனுபவித்தார் என்று எண்களின் இந்த சின்ன மலையேறும் அனுபவத்திலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது, மனதிற்குள் நினைத்தபோது உள்ளம் உடைந்தது. முடிவில் மலை உச்சியை அடைந்துவிட்டோம். அதிலிருந்து பார்த்தபோது உலகத்தின் அத்தனை காட்சிகளும் தெரிவதை போன்ற ஒரு பிரமை. அந்த நாகர்கோவில் நகரம் அந்த இருளிலும் ஒரு புது பெண்ணாக காட்சியளித்தாள். வீடுகளில் எரியும் விளக்குகளும், தெரு விளக்குகளும் மின் மினி பூச்சிகளோ என சந்தேக ப்படும் விதத்தில் கண்ணை கவர்ந்தன. சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் விதம்தான் என்ன அழகு. மற்றொரு பக்கம் பார்த்தால் பூமியே தெரியாதவண்ணம் பச்சைபசேலென செடி, கோடி, மரங்கள். வேறு ஒரு திசையில் அரபிக்கடல் தன் அலைகளாகிய கரங்களால் ஒவ்வொரு நிமிடமும் மணலை ஆரத்தழுவிவிட்டு திரும்பும் காட்சி வெகு அற்புதமாக இருந்தது. அந்த இயற்க்கை காட்சியை கண்டபோது கீழே இறங்குவதற்கு மனம் வரவில்லை. பின் அங்கிருந்து கீழே இறங்கியவுடன் அண்ணா எங்களை எதிர்கொண்டு தேநீர் அருந்த வாருங்கள் என்றார். இது துறவிகளால் வழங்கப்படுகிறதா என்று ஒரு நண்பர் கேட்டதற்கு, இல்லை பழம் நம்முடையது என்றார் பார்க்கலாம்! பெண்கள் அனைவரும் சத்தமாக சிரித்தோம். பின் அவரின் பழத்தை பார்க்க அவரை பின் தொடர்ந்தோம். அங்கிருந்து மாலை தேநீர் அருந்திவிட்டு துறவிகள் இறைவனோடு பேசும் இடத்திற்கு சென்று அவர்களிடம் சிறிது நேரம் உரையாடினோம். அதன் பின் பூஜை அறைக்கு சென்று திருப்பலி நிறைவேற்றிவிட்டு விருப்பமில்லா விருப்பத்தோடு புறப்பட தயாரானோம். அப்போது அந்த துறவி ஆசிரமத்தின் ஞாபகமாக ஒவ்வொருவருக்கும் இரண்டு புத்தகங்கள் வீதம் கொடுத்தார்கள். நன்றிபெருக்குடன் அதை பெற்றுக்கொண்டு விடை பெற்றோம். மீண்டும் பயணம் தொடர்ந்தோம். புதுப்பொலிவுடன் மீண்டும் பாட தொடங்கினோம். எங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரின் பெயரை கூறி அவர்கள் விரும்பும் பாடல் என்று எங்கள் விருப்பப்படி பாடினோம். முடிவில் முட்டத்தை சென்றடைந்தோம்.

No comments: