Saturday 7 February 2009

உறவும் துறவும்...

உறவுக்காக ஏங்கும் உள்ளம்
துறவை எண்ணி தயங்கும் எண்ணம்
குறையை நினைந்து கலங்கும் நெஞ்சம்
நிறையை நோக்கி நீங்கும் கொஞ்சம்.

பறவைபோல பறந்திட விழையும்
சிறகுகள் இன்றி சீற்றம் கொள்ளும்
பாய்மரம் போல பாய்ந்திட துடிக்கும்
பாய் விரியாது பதட்டம் அடையும்.

இப்படி பலவித மனநிலையோடு
இருக்கும் எனக்கு இன்பம் சேர்க்க
இறைவன் தந்த இளையவள் நீயே
இன்னொரு தங்கை நீயென ஏற்றேன்.

உறவுகள் பலது, ஊடலும் சிலது
உன்னறவதிலே ஊடலும் அரிது
உண்மையை நானே அறிவது எளிது
உலகமோ உன்னை புரிந்துகொள்ளாது.

இருந்தும் என்னை தேற்றிட வந்தாய்
இதயத்தன்மையை இயல்பாய் கண்டாய்
இலகுவாய் நீயே எனையும் வென்றாய்
இயைந்தே உனக்கே பணிந்திட செய்தாய்.
[0௬.௧௧.௧௯௯௧]

No comments: