உன் சந்நிதியில் உவகை கொள்ளும் என்னிதயம்
உனைக்காண உருவில்லா துயரடையும்
உறவாலே நிறைவெய்தும் என்னுள்ளம்
உனையன்றி எந்நாளும் கலக்கம் கொள்ளும்.
நான் மட்டும் சரிபாதி, நீயன்றோ மறுபாதி
நாமிருவர் சேர்ந்தாலே நலன் கோடி.
நீயின்றி நான் தவிக்கவிடலாமோ?
நலமாக நீ வருவாய் எனை நாடி.
நிலவுமகள் வான்வெளியில் தவழ்ந்துவர
நீர்மகனும் அதைக்காண பொங்கியெழ
அதுபோல உன்வரவை எதிர்நோக்கும்
ஆண்மகனாம் என் நிலையை பாராயோ?
பார்வையொன்றே பரிசாக தந்தால் போதும்
பாவியிவன் பன்மடங்கு பூரிப்படைவேன்
பாவையுந்தன் பர்க்காட்டி சிரித்தால் போதும்
பரவசமாம் பரிசதென ஏற்றுக்கொள்வேன்.
1991
Thursday 24 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment