Thursday 24 April 2008

கடிதம்போல்...

கடிதம்போல் வந்ததென்ன?
கவனத்தை கவர்ந்ததென்ன?
காதல்கொண்ட கள்ள உள்ளம்
கலையுள்ள கருணை உள்ளம்.

கவிதையன்று பாடிவிட்டேன்
கருத்தறிய காத்திருந்தேன்
கருத்தெனவே கடிதமொன்று
கண்டபோதோ கலங்கிநின்றேன்.

கடவுள் பற்றை பக்தி என்பர்
காதற்ப் பற்றோ காமமென்பர்
காதற்பற்றும் கடவுள்பற்றென
கண்டதனால் காதல் கொண்டேன்.

என் போன்ற ஒருவனுக்கு
என் இந்த காதல் இன்பம்?
காதல் கொண்ட நீ இந்த
கருத்தினையே ஏர்ப்பாயா?
1991

No comments: