காதலுக்கு கண்ணில்லை
காலமும் அதற்கு தடையில்லை
நாற்பது வயதில் நாய்க்குணமாம்
நான் ஏன் அதற்கு விதிவிலக்காம்?
பருவத்தின் கோளாறு கேட்டதுண்டு
பாவையர்க்கும் இது பொருந்தும் நன்று
பருவம் வந்த பாவையர் சிலரும்
பாதிரி என்னை அணுகியதுண்டு.
அப்போதெல்லாம் அமைதியிழந்தேன்
ஆயினும் என்னை அடக்கி வாழ்ந்தேன்
ஆண்டவர் அருளும் சேரப்பெற்றால்
அவனியில் நானும் வெற்றி கொள்வேன்.
1998
Friday 25 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment