Thursday 24 April 2008

நட்பை நாடி...

நட்பை நாடி நான் வந்தேன்-நல்
வாழ்த்தை கூறி உனை புகழ்ந்தேன்
நன்னிலம் சிறந்து நீயும் வாழ - நல்
நாயகன் இயேசுவை வேண்டி நின்றேன்.

நலம்நிறை எண்ணம் நச்செனக் கொண்டாய்
நன்றென செய்ததை தீதென கொண்டாய்
சிந்தயிர் தோன்றிய சீரான நினைவை
சீர்கெட்டதென்று சீற்றம் கொண்டாய்.

சிலவேளை நீயே இப்படியாக -என்
சிந்தையும் கலக்கம் கொள்வதை பாராய்
உள்ளத்தை புரியாதுணர்வை இழக்கும்
உனக்கென கூற எனக்கென உண்டு.
1991

No comments: