Friday 25 April 2008

தங்கைக்காக...

அண்ணன் எந்தன் கோயிலிலே
அணையாத தீபம் என் தங்கை
அந்த தீபத்தை ஏற்றிவைப்பேன்
எழிலுடனே விளங்கசெய்வேன்.

எனக்கென்று வாழவில்லை -என்
தங்கைக்காக வாழ்கின்றேன்
அவள் வாழ்வை வளமாக்க
கற்பனையில் மிதக்கின்றேன்.

கர்ப்பனையில் கண்டவைகள்-தங்கைக்கு
காரியமாய் நடக்க வேண்டும்
காலமெல்லாம் அதற்காக
கழிந்தாலும் கவலையில்லை.

வரன் பெற்று வளமும் பெற்று-அவள்
வாழ்வெல்லாம் களிக்க வேண்டும்
மக்கள் பெற்று மனம் நிறைந்து
மகராணியாய் விளங்கவேண்டும்.
1980

No comments: