Thursday 24 April 2008

முல்லைமலர் பல் காட்டி...

முல்லைமலர் பல் காட்டி- நீ
முகமலர்ந்து சிரித்திடவே
முத்துக்கள் சிதறுவதாய்-தவ
முனிவர்கூட நினைப்பனரே.

முகம்நிறைய கௌரவமாய்-நீ
முறையின்றி போவதென்ன?
முன்கோபம் போல் காட்டி -நீ
மூடி மறைப்பதென்ன?

'சாவைவிட வலுவாமே காதலென்று'
'சங்கீர்த்தனம்'கூட சாற்றும்போது
சாதாரண பெண்ணொருத்தி
சாதிக்க முயல்வதென்ன?

சாவுக்கே சவால் விடும் காதலுக்கு
சரிநிகராய் நீயிருக்க விருப்பமெனில்
சாகசங்கள் புரியவேண்டும் -இன்னும்
சாபம்கூட ஏற்க்கவேண்டும்
1991

No comments: