தூசு படிந்த என் இதய வீணையை
துடைக்க வந்தவள் நீ
துருப்பிடித்த அதன் நரம்புகளை
துலங்க வைத்தவள் நீ.
தூங்கிக்கிடந்த என் இதய ராகத்தை
துயிலெழ செய்தவளும் நீயே!
துறவுக்காக உறவை முறித்த என்னை
உறவைச்சொல்லி துறவை துரத்திட
தூண்டுபவளும் நீயன்றோ?
மணமதை துறந்தேன் -என்
மனமதை நிறைத்தேன்
மன்னவன் தனது மாசுறு மொழியால்
மாதே உந்தன் மயக்கும் விழியால்...
மயங்கிய மனதின் மருந்தென நீயும்
மறுபடி வந்தெனை உணர்த்திவிடு
மணமதை தந்து மகிழ்வுற செய்யும்
மலர்போல் உன்னை தந்துவிடு.
1991
Thursday 24 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment