இருகோடுகள் இணையாமல் சென்றால் தானே
இரயில் ஓடும் இருப்புப்பாதை அதுவென்றாகும்.
அதுபோல நாமிருவர் இணையாதிருந்தால்
அதுவன்றோ அழகுமிகு காதல் என்றாகும்.
இரயில் ஓட அக்தோடு என் மனமும் ஓட
இலட்சியமோ அடையாமல் நான் பாட
இலக்கியத்தில் காண்கின்ற காதல்கூட
இலட்சிய காதலரென நமைக்கொண்டாட...
இலக்கியமாய் நம் காதல் இன்னும் வளர
இதயத்தில் உனை நாளும் நானும் கொணர
இலக்கணமாய் காதலுக்கு நீ அமைய
இலட்சியக்காதல் அதுவென்றாகும்.
1991
Thursday 24 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment