Thursday 24 April 2008

வெறுமையாக இருந்த உள்ளம்...

வெறுமையாக இருந்த உள்ளம்
வெகுண்டெழுந்த தென்னவென்று
வெளியுலகோர் கேட்க நன்று
வெட்கி நின்றேன் நான் அன்று.

வேண்டாத உறவுகளும்
விபரீத சிந்தைகளும்
வேடிக்கையாக வந்து
வேதனையை தந்ததின்று.

வேடனவன் வலை போட்டு
வேட்டை மானை தேடுதல் போல்
வேகமுள்ள மனமின்று
வேறதையோ தேடுதின்று.

வேடமது கலைந்தபின்பு
வேறென்ன விளைவு வரும்
வேதனைகள் தொடர்ந்து வரும்
வேகம் கூட குறைந்து வரும்.
1991

No comments: