Thursday 24 April 2008

காதலே...

காதலே...
என்னுடனேயே நீயிருக்கிறாய்
தெரியுமா உனக்கது?
இருந்தும் தவிக்கிறேன் உனைக்காண...
ஏன் தெரியுமா?
இரண்டல்லாத இந்த நிலை
போதாது, அது கூடாது கண்ணே...

நீ வேண்டும்
என்முன் நீ வேண்டும்
எனிலிருந்து உனைஎடுத்து
என்முன்னிறுத்தி
உனை நீயாக பார்க்க,
உன்னோடு பேச, பழக
ஏங்குகிறேன் கண்ணே...

காதங்கள் கண்டங்கள் தாண்டிய யான்
காதலே உனைமட்டும் தாண்ட முடியாது
தவிக்கிறேன் தனிமையில்.
அத்தநிமையிலும்
உன் நினைவுகள் இனிமைதர
தற்செயலாய் வந்தாயே
மின்னஞ்சலில் நிழர்ப்படமாய்!

அழகே...
உன்னை படமாக பார்த்த பின்னே
தவிக்கிறேன் நேர் காண!
இந்த தவிப்பே என் வாழ்விங்கே
தவிப்பை தணிக்க
வா நெஞ்சே, ஓடி வா இங்கே.
2007

No comments: