சானுக்கண்ணா...
இப்படி உன்னை அழைக்க
எவ்வளவோ ஏங்கினேன்
அது ஏக்கமாகவே தொடரட்டும்...
உனக்கு நான் எழுதும்
முதர்க்கடிதம்/கவிதை இது!
அதுவும் உன் பிறந்த
நன்னாளையொட்டி.
இந்த நன்னாள் பொன்னாளாகட்டும்
உன் பிறப்பால் உலகமே சிறக்கட்டும்.
நீ அரும்பாகி, மொட்டாகி
மலராக மலர்ந்ததை
இன்னும் வளர்பிறைஎன
வளைந்து காயாகி நிற்பதை
தொலைவில் நின்று மட்டும்
பார்த்து பூரித்திருக்கிறேன்.
நீ இன்னும் கனிகொடுப்பதை
இந்த புவியே பார்த்து பூரிப்பதை
பார்க்க காத்திருக்கிறேன்
செபத்துடன் விழித்திருக்கிறேன்.
எண்ணிரண்டு பதினாறு
வயதாகும் வேளை உன்
எண்ணமெல்லாம்
மேலோங்கவேண்டும்
வண்ணமென நீ
திகழ வேண்டும்.
2007
Friday 25 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment