Thursday 24 April 2008

நீயிருக்க...

நீயிருக்க என்னிதயம் நிம்மதியளிக்கும்
நீயின்றேல் அவ்விதயம் அமைதியிழக்கும்
நிலையில்லா கடல் போல ஆழமதடையும்
நீயின்றி ஆழம் கூட வெறுமைஎன்றிருக்கும்.

வெறுமையதே வேகமுள்ள புயலாய் மாறும்
வேறென்ன என் மனதின் நிலைஎன்றாகும்?
வேண்டாமிந்த வெறுமைநிலை என்னகத்தே
வேகமாக வரும் புயலை தடுத்திடவேணும்.

புயல் வேண்டாம், பூந்தென்றல் அதுவேபோதும்
பூங்காற்றாய் நீமட்டும் இருந்தால் போதும்
புவியெல்லாம் நீ வீச பூரிப்படையும் -வரும்
புகழெல்லாம் உன்னாலே புவியதை உணரும்.
1991

No comments: