Friday 25 April 2008

உடன்பிறப்பு...

உடன்பிறப்பில்லாமல் தவித்திருந்தேன்
உதயமானான் தம்பியவன் தனிமைபோக்க
இன்றைக்கு இருபத்திமூன்றண்டு முன்னாலே
இகம்வந்தான் இளையவன் ஜாண்றோஸ்.

பிறந்தநாள் இன்றவன் பிறந்தநாள்
வந்தநாள் புகழ் எமக்கு வந்தநாள்.

அவன் வளர்ந்தான் அறிவும் வளர்த்தான்
ஆற்றலுடன் அடக்கமும் செர்த்தேபெற்றான்
ஊமைத்துரை உற்றார் உறவினர்க்கு
தம்பித்துரை அவன் எனக்கென்றும்.

பொறுமைக்கு பாறையைவிட மேலாவான்
பொங்கியெழ அலைகடலைப்போலாவான்
அடம்பிடிப்பான் அழவேமாட்டான்
அமைதியுடன் தோன்றி நிர்ப்பான்.

தமிழ்க்கலையோடு காதலையும் போற்றிநிர்ப்பான்
தமைக்காத்து நடக்கவேணும் பெண்களென்பான்
தன்மானம் தமிழனுக்கு வேணுமெனபான்-அதை
தன்வாழ்வில் வளர்த்திடவே செயல்படுவான்.
1980

No comments: