கண்டதும் காதல்கொண்ட எனை - உன்
கண்களும் காந்தமாக கவர்ந்திடவே
கவிதையொன்று பாடி உனை - என்
காதல் மனம் காட்ட வந்தேன்.
உனைக்காண உதவிபல கேட்டுவந்தேன்
கேட்டவற்றை கேட்டபடி தந்துவந்தாய்
உதவிக்கு உளம் மகிழ்ந்து நன்றிசொல்ல
உனக்கென்று கவிதையொன்று பாடவந்தேன்.
உன் கண்ணிருக்க கவிதையெல்லாம் வீணே
நீயருகிருக்க கலையழகொன்றும் காணேன்
உன் குரலென்றும் இசைபோன்ற பண்ணே
நீ நடந்துவர நடனம் கூட பாரேன்.
இப்படியும் இன்ப நிலை எயதிடவே - என்
இதயமது இனியுன்னை கெஞ்சும்
இந்நிலைக்கு எனைக்கொணர்ந்த தேவி
இவ்வுதவி தந்தெனக்கு அருள்புரிக கொஞ்சம்.
காவியங்கள் பல்வேறு பாடக்கேட்டேன் -இன்னும்
ஓவியங்கள் வண்ண வண்ண எழிலில் கண்டேன்
என்றிருந்தும் உனைப்போன்ற காவியமோ ஓவியமோ
எங்கணுமே கேட்டதில்லை கண்டதில்லை கண்ணே.
நீ சிரித்தால் முத்துதிர பார்ப்பேன்
நீ சினந்தால் சத்துதிர உணர்வேன்
நீ மொழிந்தால் இனிப்பதென சுவைப்பேன்
நீ இழந்தால் கசப்பதென அறிவேன்.
நீ வாழ நித்தமும் யான் வேண்டுகிறேன்
நிலையான புகழ் உனக்கு வாழ்த்துகிறேன்
நீங்காத இன்பம் நிழல்போல தொடர
நிகரில்லா தலைவனையே வேண்டுகிறேன்.
1991
Thursday 24 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment